Mar 28, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

முகைதீனுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமரும்,பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான வழக்கு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுதலை செய்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று முகைதீன் செய்துகொண்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து முகைதீனுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கான தேதியை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிர்ணயித்து இருந்தது.

இவ்வழக்கு, நான்கு குற்றச்சாட்டுகளுடன் மேலும் 3 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு 7 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஏகக்காலத்தில் விசாரணைக்கு வருகிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி