கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற சின் பெங்குடன் ஜசெகவின் உயர்மட்டத் தலைவர்கள் குடும்ப உறவு பந்தம் இருக்கிறது என கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா கூறியது தொடர்பில் அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் தேசிய முன்னணியின் தேர்தல் பரப்பரை கையேட்டை காவல் துறை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையிடம் தாம் தொடர்பு கொண்ட பிறகு, இந்த விவரத்தை உறுதி படுத்தி இருக்கிறார் அம்னோவின் முன்னாள் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் இஷாம் ஜாலில்.
அம்னோவின் தகவல் குழு, தேசிய முன்னணியின் தகவல் தொடர்புக் குழுவுடன் எப்போதும் ஒரே பாதையில் பயணிக்கும் என்பது கிடையாது. இருந்தபோது, இவ்வாறான கையேட்டை தேசிய முன்னணி வெளியிட்டிருக்காது எனத் தாம் நம்புவதாகக் கூறும் அவர். இவ்வொவகாரம் குறித்து தாம் காவல் துறையுடன் ஒத்துழைக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.








