கெடா, சிக், புக்கிட் எங்காங் பகுதியில் அரிய கனிமவள மண் களவாடப்பட்ட விவகாரம், கெடா மந்திரி புசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த அரிய மண் தோண்டும் நடவடிக்கையில் அதிகாரத் துஷ்பிரயோகமும், முறைகேடும் நடந்து இருப்பது தமக்கு தெரியாது என்றும் அதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் கெடா மாநில சட்டமன்றக்கூட்டத்தில் மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோர் கூறியிருப்பதாக சைபுடீன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மந்திரி புசார் வாரியத்தில் வேலை செய்த சீன நாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த அரிய மண் களவாடல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது மந்திரி பெசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று சைபுடீன் விளக்கினார்.
அரிய மண் களவாடப்பட்ட விவகாரத்தில் மந்திரி புசார் வாரியத்தை சேர்ந்த தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குநர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எச்பிஆர்எம் நேற்று அறிவித்துள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


