கெடா, சிக், புக்கிட் எங்காங் பகுதியில் அரிய கனிமவள மண் களவாடப்பட்ட விவகாரம், கெடா மந்திரி புசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த அரிய மண் தோண்டும் நடவடிக்கையில் அதிகாரத் துஷ்பிரயோகமும், முறைகேடும் நடந்து இருப்பது தமக்கு தெரியாது என்றும் அதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் கெடா மாநில சட்டமன்றக்கூட்டத்தில் மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோர் கூறியிருப்பதாக சைபுடீன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மந்திரி புசார் வாரியத்தில் வேலை செய்த சீன நாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த அரிய மண் களவாடல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது மந்திரி பெசார் வாரியத்திற்கு நன்கு தெரியும் என்று சைபுடீன் விளக்கினார்.
அரிய மண் களவாடப்பட்ட விவகாரத்தில் மந்திரி புசார் வாரியத்தை சேர்ந்த தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குநர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எச்பிஆர்எம் நேற்று அறிவித்துள்ளது.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


