அடுத்த மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரியை மறுபடியும் அறிமுகப்படுத்துமாறு ஜி25 என்ற அமைப்பு, அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வருவாயை வலுப்படுத்த ஜி.எஸ்.டி வரிமுறையை மீண்டும் அமல்படுத்துவது மிக முக்கியமாகும் என்று அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றவர்களை கொண்டு அமைக்கப்பட்ட அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டிற்கு வலுவான வருவாய் மிகவும் அடிப்படையானது. இதன் மூலம் நாட்டின் பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வுதியத்திட்டங்களை வடிவமைக்க உதவும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி யை அமல்படுத்துவதும், எரிபொருளுக்கான மானியங்களை குறைப்பதும் அதிக பலன்களைத் தரும் என்று ஜி25 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


