அடுத்த மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரியை மறுபடியும் அறிமுகப்படுத்துமாறு ஜி25 என்ற அமைப்பு, அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வருவாயை வலுப்படுத்த ஜி.எஸ்.டி வரிமுறையை மீண்டும் அமல்படுத்துவது மிக முக்கியமாகும் என்று அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றவர்களை கொண்டு அமைக்கப்பட்ட அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டிற்கு வலுவான வருவாய் மிகவும் அடிப்படையானது. இதன் மூலம் நாட்டின் பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வுதியத்திட்டங்களை வடிவமைக்க உதவும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி யை அமல்படுத்துவதும், எரிபொருளுக்கான மானியங்களை குறைப்பதும் அதிக பலன்களைத் தரும் என்று ஜி25 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


