Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து உயர வரம்புத் தடையை மோதி 9 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து உயர வரம்புத் தடையை மோதி 9 பேர் காயம்

Share:

சிரம்பான், ஜூலை.05-

விரைவு பேருந்து ஒன்று, சாலை உயர வரம்புத் தடையை மோதி, விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நீலாய், ஜாலான் அராப் மலேசியன் சாலையில் நிகழ்ந்தது.

குறிப்பிட்ட உயரத்திற்கு அதிகமான வாகனங்கள், அந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த பேருந்து அந்தச் சாலையைப் பயன்படுத்தியதால், உயர வரம்புத் தடையை மோதி, பேருந்து முன்புற கட்டுமானம் சரிந்தது.

இதில் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

19 பயணிகளுடன் அந்த பேருந்து சிலாங்கூர், காஜாங்கிலிருந்து மலாக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்தது. காயமுற்றவர்கள் அனைவரும் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் ஒன்பது வீரர்கள் ஈடுபட்டதாக நீலாய் தீயணைப்பு நிலையத்தின் செயலாக்கக் கமாண்டர் அஸ்மி ஹாமிட் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது