May 18, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து உயர வரம்புத் தடையை மோதி 9 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து உயர வரம்புத் தடையை மோதி 9 பேர் காயம்

Share:

சிரம்பான், ஜூலை.05-

விரைவு பேருந்து ஒன்று, சாலை உயர வரம்புத் தடையை மோதி, விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் நீலாய், ஜாலான் அராப் மலேசியன் சாலையில் நிகழ்ந்தது.

குறிப்பிட்ட உயரத்திற்கு அதிகமான வாகனங்கள், அந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த பேருந்து அந்தச் சாலையைப் பயன்படுத்தியதால், உயர வரம்புத் தடையை மோதி, பேருந்து முன்புற கட்டுமானம் சரிந்தது.

இதில் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

19 பயணிகளுடன் அந்த பேருந்து சிலாங்கூர், காஜாங்கிலிருந்து மலாக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்தது. காயமுற்றவர்கள் அனைவரும் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் ஒன்பது வீரர்கள் ஈடுபட்டதாக நீலாய் தீயணைப்பு நிலையத்தின் செயலாக்கக் கமாண்டர் அஸ்மி ஹாமிட் தெரிவித்தார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன