பத்து பாஹாட்,ஜன.12
ஜொகூர்,பத்து பாஹாட் - டில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே கலவரத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் சந்தேகிக்கும் நபர்கள் கடந்த புதன்கிழமை, ஜனவரி 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக பத்து பாஹாட் ஓசிபிடி இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.
25 வயதுடைய பாதிக்கப்பட்ட ஆண் பள்ளியில் தம் நண்பனை அழைத்து செல்வதற்காக காத்திருந்த வேளையில் எட்டு பேர் அவரை கட்டைகளால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
15 முதல் 40 வயது உள்ள அந்த சந்தேகிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் இஸ்மாயில் டோலா கூறினார்.
குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.








