Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.05-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே ஆகிய இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று, மேலும் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில், வீட்டு வாடகைச் செலவுகளுக்காக ஆல்பெர்ட் தேவிடமிருந்து 64 ஆயிரத்து 924 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ஷாம்சுல் இஸ்கண்டார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 17(a) இன் கீழ் ஷாம்சுலுக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு, ஆல்பெர்ட் தே மீது அதே சட்டப் பிரிவு 17(b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நாசீர் நோர்டின் முன்னிலையில், குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், 49 வயதான ஷாம்சுல் மற்றும் 37 வயதான ஆல்பெர்ட் தே ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

சபாவில் ஆல்பெர்ட் தேவிற்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு கனிம சுரங்க உரிமங்களுக்கான ஒப்புதலைப் பெற்றுத் தர ஷாம்சுல் இஸ்கண்டார், லஞ்ச ஊழல் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று முதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி