May 6, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா திங்கி காட்டுத் தீ: அடர் புகை மூட்டத்தால் 2 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றம்!
தற்போதைய செய்திகள்

கோத்தா திங்கி காட்டுத் தீ: அடர் புகை மூட்டத்தால் 2 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றம்!

Share:

கோத்தா திங்கி, ஜனவரி.25-

கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை கப்பால் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலக்கரி மண் தீ விபத்தினால் வெளியேறும் அடர் புகையிலிருந்து காக்க, தாமான் பாயு டாமாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் காட்டுத் தீயை அணைக்க ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், இதுவரை 57 விழுக்காட்டுப் பகுதியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாகப் பரவுவதோடு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனை தமது அலுவலகம் முழுமையாகக் கவனித்து வருவதாக தஞ்சோங் சுராட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார். தற்போது நிலவும் வறண்ட வானிலையையும் பலத்த காற்றையும் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு மாநில அரசும் தீயணைப்புத் துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்