அண்டை நாடான சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றானது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியாவில் அதன் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே 16-ஆம் தேதியுடன் முடிவுற்ற, 2026 ஆம் ஆண்டிற்கான 19-வது தொற்றியல் வாரத் தரவுகளை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 9 ஆயிரத்து 682 தொற்று சம்பவங்கள் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், வாரந்தோறும் ஒப்பிடுகையில், 0.7 விழுக்காடு அல்லது 575 தொற்று சம்பவங்கள், சிறிய அளவில் அதிகரித்திருந்தாலும் கூட, நிலைமையானது முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பதிவாகியுள்ள பெரும்பாலான தொற்று சம்பவங்களில், மருத்துவமனை அனுமதியே தேவையில்லை என்றும், 2026- ஆண்டு முழுவதும் கோவிட்-19 காரணமாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.








