Jun 6, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி
தற்போதைய செய்திகள்

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

Share:

திரங்காணு – பகாங் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் கிணறு தளம் ஒன்றில், நேற்று நடைபெற்ற அவசரகால வெளியேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், மூடப்பட்ட உயிர்காப்புப் படகு ஒன்றில், நான்கு பேரும் அவசரகால வெளியேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதைத் தாங்கியிருந்த கம்பிகள் திடீரென அறுந்து, விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில், மீட்புக் குழுவினரால் கோல திரங்காணுவிலுள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்றாலும், அவர்களில் மூன்று பேர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்படும் போதே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுதினர்.

மேலும், காயமடைந்த 36 வயதான ஆடவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு