பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பம்பாங்கா மாநிலத்தின் ஏஞ்சலஸ் சிட்டி நகரில், கட்டுமானப் பணிகளில் இருந்த ஒன்பது மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், மலேசியர் ஒருவர் மரணமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கட்டிடமானது அருகிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஹோட்டலின் மீது சரிந்து விழுந்ததில், அதில் தங்கியிருந்த மலேசியர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தில் மொத்தம் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்தும், 2 பேர் அருகில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஹோட்டலில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.








