May 25, 2026
Thisaigal NewsYouTube
28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
தற்போதைய செய்திகள்

28 மலேசிய ஜிஎஸ்எஃப் 2.0 செயற்பாட்டாளர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

Share:

காசாவுக்கான மனிதநேய உதவிகளை மேற்கொள்ளும் குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 பயணத்தின் போது, இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 28 மலேசியர்களும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி, சுமார் 2.20 மணியளவில், சுமூத் புளோட்டிலா கட்டளை மையமான எஸ்என்சிசியின் தலைமை இயக்குநர் சானி அரபி அப்துல் அலிம் அரபி உடன், இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில், துபாய் வழியாகப் பயணித்த அவ்விமானம், நேற்று இரவு 9.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் டெர்மினல் 1-ஐ வந்தடைந்தது.

அவர்களை வரவேற்க சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் தர்மிசி சுலைமான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அதேவேளையில், 100-க்கும் மேற்பட்ட உறவினர்களும், ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

உறவினர்கள் சிலர், செயற்பாட்டாளர்களைக் கண்ணீருடன் வரவேற்ற காட்சி, அங்கிருந்தவர்களையும் கலங்க வைத்தது.

இதனிடையே,ரஸ்மான் மாட் அலி என்ற செயற்பாட்டாளர் இஸ்தான்புல் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இஸ்ரேலிய படையினர் தாக்கியதில் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி