Dec 5, 2025
Thisaigal NewsYouTube
4.13 மில்லின் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

4.13 மில்லின் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல்

Share:

ஷா ஆலாம், ஜூலை.16-

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் 4.13 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ஹெரோயின் போதைப்பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 47 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று நபர்கள் பிடிபட்டதாக ஹுசேன் ஒமார் குறிப்பிட்டடார்.

சுபாங் ஜெயா, ஜாலான் யுஎஸ்ஜே 19/4 இல், ஆடவர் ஒருவர் செலுத்திய மஸ்டா ரகக் கார் தடுக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்ட போது 14.52 கிலோ எடை கொண்ட ஹெரோயின் பேஸ் போதைப்பொருளும், 920 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஶ்ரீ கெம்பாஙானில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் இரண்டாவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டு 25.55 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்து.

மூன்றாவது சோதனை பினாங்கு, பெர்மாதாங் பாவோவில் ஓர் உணவகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டு, அவரின் வீட்டில் 7.46 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 4.13 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்