May 6, 2026
Thisaigal NewsYouTube
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.05-

கடந்த நவம்பர் மாதம், மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சட்டத்திற்குப் புறம்பான வகையில் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள் என இலக்கவியல் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இது போன்ற அசம்பாவிதங்கள் போலீசாரால் ஏற்பட்டாலோ அல்லது போலீஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்டாலோ அதனை விசாரணை செய்ய குற்றவியல் சட்டத்தில் இடமுண்டு என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார் .

சட்டம் மற்றும் நீதியின் மீது மக்களின் நம்பிக்கை நிலைக்க வேண்டுமானால், அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே போலீஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மணிசேகரன் மோகன் என்ற 41 வயது லோரி ஓட்டுநர், சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த சம்பவத்தில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்றும் கோபிந்த் சிங் கேள்வி எழுப்பினார்.

தடுப்புக் காவல் மரணங்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 334-ன் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட கோபிந்த் சிங், இது குறித்து சட்டத்துறை அலுவலகம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற சம்பவங்களில், புலன்விசாரணை வெளிப்படைத்தன்மையோடும், துல்லியமாகவும் செயல்படுவதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அவர் கருத்துரைத்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்