Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெண்ணை ஒளிந்திருந்த பார்​த்த ஆடவரை போ​லீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பெண்ணை ஒளிந்திருந்த பார்​த்த ஆடவரை போ​லீஸ் தேடுகிறது

Share:

தாப்பவில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறையி​ல் மாது ஒருவர் நுழைந்த போது, அவரை பின் தொடர்ந்து சென்று ஒளிந்திருந்து பார்த்த ஒரு நபரை போ​லீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான காணொளி, ச​​மூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கழிப்பறை​யில் யாருக்கோ காத்திருப்பதைப் போல் பாவனை செய்து, இந்த கைங்கரியத்தைப் புரிந்த நபர் தேடப்பட்டு வருவதாக பேரா மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.

சம்பவத்தன்று மாலை 4.00 மணியளவில் தாம் கழிப்பறையில் இருந்த போது, ஆடவர் ஒருவர் ஒளிந்திருந்து தம்மை பார்த்ததாக 35 வயது மாது போ​லீசில் புகார் செய்துள்ளார். அந்த ஆடவரின் பார்வையிலிருந்து தன்னை சுதாரித்துக்கொண்ட அந்த மாது, அவசர அவசரமாக கழிப்பறையிலிருந்து வெளியேறியுள்ளார். கழிப்பறைக்குள் நுழைந்த அந்த நபரும், பின்னர் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி, கார் நிறுத்தம் இடத்தில் தொயோத்தா அவான்சா புறப்பட்டது.

எண்ணெய் நிலையத்தின் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர், பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை சோதனை​ செய்த போது, அக்கார், பத்துகாஜா அருகில் ​​பூசிங்கில் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த காரின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு அந்த நபர் தற்போது ​தீவிரமாக ​தேடப்பட்ட வருவதாக முஹமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்