May 18, 2026
Thisaigal NewsYouTube
சிண்டிகேட் வாயிலாக ஆள் கொண்டு வருவதைத் தவிர்ப்பீர்
தற்போதைய செய்திகள்

சிண்டிகேட் வாயிலாக ஆள் கொண்டு வருவதைத் தவிர்ப்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.04-

வங்காளதேசத்திலிருந்து சிண்டிகேட் கும்பல் மூலமாக தொழிலாளர்கள் தருவிக்கப்படும் முறையை மலேசியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் சிண்டிகேட் கும்பலை இடைத் தரகராகப் பயன்படுத்த வேண்டாம் என்று வங்காளதேசம் விடுத்துள்ள கோரிக்கையை மலேசியா கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தங்கள் பிரஜைகள், மலேசியாவிற்கு வேலைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தடை விதிக்கக்கூடும் என்று வெளிநாட்டில் வேலை செய்து வரும் வங்காளதேசப் பிரஜைகள் நலன்சார்ந்த அமைச்சின் ஆலோசகர் அசிஃப் நஸ்ருல் அண்மையில் நினைவுறுத்தியிருந்தார்.

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு இந்த சிண்டிகேட்டுக்கு, தலா ஒரு தொழிலாளி 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 30 ஆயிரம் ரிங்கிட் வரை செலுத்த வேண்டியிருக்கிறது.

இதனால், அந்த வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே கடனில் தள்ளப்படுகின்றனர் என்று ஆசியான் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைத் தலைவரான சார்ல்ஸ் தெரிவித்தார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன