May 4, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை
தற்போதைய செய்திகள்

கிள்ளான் துப்பாக்கிச் சூடு , வாகன மோதல் விவகாரம்: இரண்டு புதிய சாட்சிகளைக் கண்டறிந்தது காவற்படை

Share:

கிள்ளான், மார்ச்.08-

கிள்ளான், காப்பார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு, வாகன மோதல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு புதிய சாட்சிகளிடம் காவற்படை வாக்குமூலம் பெற்றுள்ளதாக கிளாங் உத்தாரா மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தொழிலாளி ஒருவரை நோக்கிச் சுட்டதைத் தொடர்ந்து, அவரது முதலாளி துரத்திச் சென்று மோதியதில் ஒரு சந்தேக நபர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை அறிய காவற்படை தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், பிடிபட்ட நபர்கள் மீதும் உயிரிழந்தவர் மீதும் ஏற்கனவே பல குற்றவியல் வழக்குகள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Related News