May 18, 2026
Thisaigal NewsYouTube
சாலை வளைவில் மோதி, போக்குவரத்து போலீஸ்காரர் மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை வளைவில் மோதி, போக்குவரத்து போலீஸ்காரர் மரணம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

கோலாலம்பூரில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

24 வயது லான்ஸ் கோப்ரல் முகமட் அமிருல் அய்மான் என்ற அந்த போலீஸ்காரர், அதிகாலை 4.30 மணியளவில் ஜாலான் துன் ராஸாக்கிலிருந்து செலாயாங்கை நோக்கி, ஜாலான் கூச்சிங் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரின் மோட்டார் சைக்கிள் சாலை வளைவில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய அந்த போலீஸ்காரர், சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரின் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி