முதலாவது சொந்த வீட்டை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் முத்திரை வரி விலக்களிப்பு தொடரும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து, சொந்த வீட்டைப் பெறும் மக்களின் விருப்பத்திற்கு ஓர் ஊக்குவிப்பாக இது அமையும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்தத் திட்டமானது, நாட்டில் குறிப்பாகச் சிலாங்கூர் மாநிலத்தில் முதல் வீட்டை அல்லது புதிதாக வீட்டை வாங்க விரும்புவோருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் அதே வேளையில், இந்த வரி விலக்கின் மூலம் அவர்களால் எளிதாகவும் வீடுகளை வாங்க முடியும் என்று அனைத்துலக இஸ்லாமிய பல்க்லைக்கழகத்தில் சிலாங்கூர் மாநில நிலையிலான 2023 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


