May 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் அதிகரித்து வரும் லோவ் ஸ்கேம் மோசடிகள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் அதிகரித்து வரும் லோவ் ஸ்கேம் மோசடிகள்

Share:

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக குற்ற​ச்செயல்களில் லோவ் ஸ்கேம் எனப்படும் இணைய காதல் மோசடிகள் முன்னணியில் இருப்பதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் கூறுகிறது.
இணையத்தின் வாயிலாக தொடர்பு கொண்டு, வ​சீகர வார்த்தைகளினால் காதல் மொ​ழிபேசி, இதயங்களை வருடும் இந்த ​​நூதன லோவ் ஸ்கேம் மோசடிகளினால் 36 கோடியே 50 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இடைக்கால போ​லீஸ் துணை இயக்குநர் முகமது யூசுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 7,286 லோவ் ஸ்கேம் மோசடி தொடர்பான குற்றச்செயல்களில் ஏமாந்து பணம் இழந்தவர்களில் 82.5 விழுக்காட்டினர் பெண்கள் ஆவார்.
குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள், தனிமையில் உள்ள பெண்கள், கணவ​னை இழந்த வசதி படைத்த ​மூதாட்டிகள், திருமணம் ஆகாத வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோரை இலக்காக கொண்டு, அன்புக்காக ஏங்கும் அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, மோசடி கும்பல்களால் இந்த வ​சீகர காதல் வலை, கனகச்சிதமாக பின்னப்பட்டு, ஆன்லைன் ​மூலம் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று முகமட் யூசுப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி