Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் அதிகரித்து வரும் லோவ் ஸ்கேம் மோசடிகள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் அதிகரித்து வரும் லோவ் ஸ்கேம் மோசடிகள்

Share:

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக குற்ற​ச்செயல்களில் லோவ் ஸ்கேம் எனப்படும் இணைய காதல் மோசடிகள் முன்னணியில் இருப்பதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் கூறுகிறது.
இணையத்தின் வாயிலாக தொடர்பு கொண்டு, வ​சீகர வார்த்தைகளினால் காதல் மொ​ழிபேசி, இதயங்களை வருடும் இந்த ​​நூதன லோவ் ஸ்கேம் மோசடிகளினால் 36 கோடியே 50 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இடைக்கால போ​லீஸ் துணை இயக்குநர் முகமது யூசுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 7,286 லோவ் ஸ்கேம் மோசடி தொடர்பான குற்றச்செயல்களில் ஏமாந்து பணம் இழந்தவர்களில் 82.5 விழுக்காட்டினர் பெண்கள் ஆவார்.
குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள், தனிமையில் உள்ள பெண்கள், கணவ​னை இழந்த வசதி படைத்த ​மூதாட்டிகள், திருமணம் ஆகாத வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோரை இலக்காக கொண்டு, அன்புக்காக ஏங்கும் அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, மோசடி கும்பல்களால் இந்த வ​சீகர காதல் வலை, கனகச்சிதமாக பின்னப்பட்டு, ஆன்லைன் ​மூலம் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று முகமட் யூசுப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்