Jan 16, 2026
Thisaigal NewsYouTube
கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது
தற்போதைய செய்திகள்

கண் கட்டு வித்தை மூலம் கைவரிசை: திருட்டில் ஈடுபட்ட 5 ஈரானியர்கள் மலேசியாவில் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.16-

மலேசியாவில் 'பில்லி சூனியம்' அல்லது 'கண் கட்டு வித்தை' போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி பணத்தைத் திருடி வந்த ஐந்து ஈரானிய பிரஜைகளைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல வேடமணிந்து, மளிகைக் கடைகள் மற்றும் பணப் பரிமாற்ற நிலையங்களை இலக்கு வைத்துள்ளனர். தங்களுக்கு உள்ளூர் ரூபாய் நோட்டுகள் பற்றித் தெரியாது எனக் கூறி, கடைக்காரர்களிடம் ரூபாய் நோட்டுகளைக் காண்பிக்கும்படி கேட்டுள்ளனர்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் 'கண் கட்டு வித்தை' போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுக் கட்டாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பிச் செல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

அமைதியான பேரணிச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முடிவை ஏஜிசி கைவிட்டது

"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ

"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு: ஜூன் 15-ல் விசாரணை

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு: ஜூன் 15-ல் விசாரணை

சிறுவனைத் துன்புறுத்திய தாய் மற்றும் காதலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சிறுவனைத் துன்புறுத்திய தாய் மற்றும் காதலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

4 மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

4 மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமை: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஊழல் புகார்களால்  தற்காப்பு  மற்றும் போலீஸ் துறை கொள்முதல் நிறுத்தி வைக்க முடிவு: பிரதமர்

ஊழல் புகார்களால் தற்காப்பு மற்றும் போலீஸ் துறை கொள்முதல் நிறுத்தி வைக்க முடிவு: பிரதமர்