Apr 10, 2026
Thisaigal NewsYouTube
கரோக்கே  மையத்தில் ரகளை: 34 பேருக்கு அபராதம் விதிப்பு
தற்போதைய செய்திகள்

கரோக்கே மையத்தில் ரகளை: 34 பேருக்கு அபராதம் விதிப்பு

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், தாமான் ஷாமெலின் பகுதியிலுள்ள கரோக்கே மையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 34 ஆடவர்களுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அபராதம் விதித்துள்ளது.

இதில் 21 முதல் 57 வயதுக்குட்பட்ட 32 பேருக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 4 மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 19 வயதுடைய இரு இளைஞர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, லாரி ஒன்றின் மூலம் கரோக்கே மையத்தின் வாயில் கதவை இடித்துத் தள்ளிய இக்கும்பல், கம்பு மற்றும் கற்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. இது தொடர்பான ஒரு நிமிடக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 32 பேருக்கும் இது முதல் குற்றம் என்பதால், மாஜிஸ்திரேட் ஃபைசானூர் ஹசன் அபராதத் தொகையை மட்டுமே விதித்தார்.

Related News

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்: ரஃபிஸி மீது நடவடிக்கை கோருவோருக்கு அன்வார் அறிவுரை

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்: ரஃபிஸி மீது நடவடிக்கை கோருவோருக்கு அன்வார் அறிவுரை

விமானக் கட்டணங்கள் 40 விழுக்காடு  வரை உயர்வு: எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ்  நடவடிக்கை

விமானக் கட்டணங்கள் 40 விழுக்காடு வரை உயர்வு: எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் நடவடிக்கை

பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்

பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்

டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை

டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை

ஊடகத்தின் வாயிலாக நற்பெயர் மேலாண்மை: பினாங்கில் இப்தார் (IPPTAR) நடத்திய சிறப்புப் பயிற்சி

ஊடகத்தின் வாயிலாக நற்பெயர் மேலாண்மை: பினாங்கில் இப்தார் (IPPTAR) நடத்திய சிறப்புப் பயிற்சி

3 வயது சிறுமியைத் துன்புறுத்திய கர்ப்பிணி மற்றும் அவரது தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

3 வயது சிறுமியைத் துன்புறுத்திய கர்ப்பிணி மற்றும் அவரது தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கரோக்கே மையத்தில் ரகளை: 34 பேருக்கு அபராதம் விதிப்பு | Thisaigal News