ஜோர்ஜ்டவுன், பூலாவ் பினாங் எக்ஸ்போ -யில் நேற்று பெய்த அடைமழையினால் தீடீர் வெள்ளமும் மரங்களும் முறிந்து விழுந்தன.
எக்ஸ்போ - வில் போடப்பட்டிருந்த தொலைபேசி உபரி பாகங்கள், குளிர்பானங்கள் போன்ற கடைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக 43 வயதுடைய இஜான் கூறினார்.
வடிக்காலில் மழை நீரை கையாள முடியாததால் நீர் நிரம்பி வழிகிறது என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
எக்ஸ்போ வின் போது பின்புறத்தில் போடப்பட்டிருந்த கடைகள் வாய்காலுக்கு அருகில் இருந்ததால் வெள்ளத்தில் அக்கடைகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக இஜான் விளக்கினார்.








