Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முதியவர் விபத்தில் மரணம்
தற்போதைய செய்திகள்

முதியவர் விபத்தில் மரணம்

Share:

முதியவர் ஒருவர் செலுத்திய கார், விபத்துக்குள்ளானதில் அவர் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 158 ஆவது கிலோ ​மீட்டரில் பினாங்கு, பத்துகாவானுக்கு அருகில் நிகழ்ந்தது.

63 வயது ஆர். தாமோதரன் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. தாமோதரன் செலுத்திய புரோடுவா கெம்பாரா கார், டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சுங்கை பாகாப் தீயணைப்பு, ​மீட்புப்படையின் உயர் ​அதிகாரி முகமது பைசல் கான் தெரிவித்தார்.

ஜாவி யிலிருந்து புக்கிட் தம்புனை நோக்கி, அந்த முதியவர் பயணித்துக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News