இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களுக்கு பெரும் மிரட்டலாக இருப்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களே என்று கூறி இனத்துவேசத்தைத் தூண்டிவிட்டு, நாட்டின் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைத்து வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்லின மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமைக்கு ஆணியடிக்கும் கைங்கரியத்தை புரிந்து வரும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக மலேசியர்கள், போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டுள்ளார்.
முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவர் பெரிய கொள்ளையர்கள் என்று கூறி, ஆகக்கடைசியாக ஹடி ஆவாங் தமது முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருப்பது, பிற இனத்தவரின் உணர்வையையும் பொறுமையையும் உரசி பார்க்கும் செயலாகும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்று ஹடி ஆவாங் செயல்பட்டதையும் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் அரசியலையும், பொருளாதாரத்தையும் சீரழித்து வருகின்றனர் என்பதுடன் லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றனர் என்று அந்த மதவாதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருப்பதையும் லிம் குவான் எங் மேற்கோள் காட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


