May 24, 2026
Thisaigal NewsYouTube
கெடா கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தயார்
தற்போதைய செய்திகள்

கெடா கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தயார்

Share:

ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 03-

சுத்திகரிக்கப்படாத தண்ணீருக்காக ஆண்டு 5 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்து இருக்கும் கெடா மாநில அரசுக்கு நீதிமன்றத்தில் பதில் அளிக்க பினாங்கு அரசு தயாராக இருப்பதாக அதன் முதலமைச்சர் சௌ கோன் இயோவ் அறிவித்துள்ளார்.

இந்த இழப்பீட்டு கோரிக்கை தொடர்பாக கெடா மாநில அரசாங்கத்திடமிருந்து தாங்கள் எந்தவொரு நோட்டீஸையும் இதுவரையில் பெறவில்லை என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

அப்படியொரு கோரிக்கையை கெடா அரசு முன்வைக்குமானால் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பினாங்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கட்டணத்தைக் கோரி, அந்த மாநில அரசுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி நோர் நேற்று அறிவித்து இருப்பது தொடர்பில் சௌ கோன் இயோவ் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:  பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி