May 15, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மண்டபத்தில் தீ : சீரமைப்புப் பணிகளுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்  உடனடி நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

பள்ளி மண்டபத்தில் தீ : சீரமைப்புப் பணிகளுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் உடனடி நிதி ஒதுக்கீடு

Share:

புத்ராஜெயாவில் பள்ளி மண்டபத்தின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தூய்மைப்படுத்துதல் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக ஒரு லட்சம் ரிங்கிட் ஆரம்ப நிதியுதவி உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் அறிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் புத்ராஜெயா பிரிசிண்ட் 14 இல் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மண்டபத்தின் மேடைக்கு பின்புறம் சேமித்து வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் இழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

பயனீட்டுச் சேவைகளை மீண்டும் இணைக்கவும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் வேளையில், பாதுகாப்பு கருதி அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News