தலைமையாசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டு மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவ தொடர்பில் விரிவான விசாரணை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் உறுதியளித்துள்ளார். செகாமட், ஜெமென்டா வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்ட இவ்விவகாரத்தில் தலைமையாசிரியர் குற்றம் இழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளையில் போலீசார் மேற்கொள்ளும் புலன்விசாரணைக்கும் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று பத்லினா சிடெக் உறுதியளித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


