தலைமையாசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டு மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவ தொடர்பில் விரிவான விசாரணை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் உறுதியளித்துள்ளார். செகாமட், ஜெமென்டா வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்ட இவ்விவகாரத்தில் தலைமையாசிரியர் குற்றம் இழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளையில் போலீசார் மேற்கொள்ளும் புலன்விசாரணைக்கும் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று பத்லினா சிடெக் உறுதியளித்தார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன


