மலேசியாவில் இவ்வாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 9-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் 42 ஆயிரத்து 848 டெங்கு பாதிப்பு மற்றும் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 31 ஆயிரத்து 790 பாதிப்புகள் மற்றும் 19 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
இதன் அடிப்படையில், டெங்கு பாதிப்பு 34.8 சதவீதமும், உயிரிழப்புகள் 78.9 சதவீதமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த டெங்கு பாதிப்புகளில் 63.5 சதவீதம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








