Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் பள்ளி நடவடிக்கையின் போது மயங்கி விழுந்த ஆறாம் படிவ மாணவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் பள்ளி நடவடிக்கையின் போது மயங்கி விழுந்த ஆறாம் படிவ மாணவர் மரணம்

Share:

மலாக்கா, ஜலான் சான் கூன் செங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் புறப்பாடப் பாடநிலை அறிமுக நிகழ்ச்சிக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 18 வயது ஆறாம் படிவ மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் வகுப்பறை நடைபாடையில் நின்றிருந்தபோது அவர் மயக்கமடைந்தார். உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, சுமார் 68 நிமிடங்களுக்கும் மேலாக அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அன்றைய தினம் இரவு 7.11 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மலாக்கா தெங்கா போலீஸ் துணைத் தலைவர் ஹலிம் அபாஸ் கூறுகையில், அம்மாணவருக்கு எவ்வித மருத்துவப் பின்னணியும் இல்லை என்றும், அவர் விளையாட்டுத் துறையில் சுறுசுறுப்பாக இருந்தவர் என்றும் அவரது தாயார் கூறியதாகத் தெரிவித்தார்.

நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், பிறப்பிலிருந்தே இதயக் குறைபாடே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என போலீஸார் வகைப்படுத்தியுள்ளனர்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

மலாக்காவில் பள்ளி நடவடிக்கையின் போது மயங்கி விழுந்த ஆறாம்... | Thisaigal News