தெமர்லோ ஜாலான் கோலாலம்பூர்–குவாந்தான் சாலையில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்தில் 48 வயதான கே.பரமசிவன் காசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு 8.40 மணியளவில் நடந்த விபத்தில், பரமசிவன் காசி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சறுக்கிச் சென்று பெரோடுவா அல்சா காரின் பாதைக்குள் சென்று மோதியதாக நம்பப்படுகின்றது.
இந்த மோதலில் காரின் கண்ணாடியில் தூக்கி வீசப்பட்ட அவர், சுமார் 20 மீட்டர் தூர இழுத்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.








