பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இடையிலான வார்த்தைப் போர் தற்போது ஜென் ஸீ மொழி பாணியிலும் வெளிப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற அன்வார், தமது சமூக ஊடகப் பதிவில் தன்னை “குரு” என்றும், மற்றவர்களை “மாணவர்கள்” என்றும் குறிப்பிட்டு, “மடானி தூதரக உறவுகள்” எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ளட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அன்வார் தனது பதிவின் முடிவில் ‘ஸ்லேய்’ (Slayyy) என்ற ஜென் ஸீ வார்த்தையையும், நகத்தில் வர்ணம் பூசும் எமோஜியையும் பயன்படுத்தியுள்ளார்.
நகத்தில் வர்ணம் பூசும் எமோஜியானது, ஒரு துணிச்சலான கருத்தைச் சொல்லிவிட்டு, “மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை” என்ற மனநிலையை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இதே “குரு” என்ற வார்த்தையை நேற்று அம்னோ பொதுக்குழுவில் அன்வாரை விமர்சிக்கும் வகையில் ஸாஹிட் பயன்படுத்தியிருந்தார்.
“போதும் குருவே... எங்களது குரலையும் கேளுங்கள் குருவே. நீங்கள் செய்ததைவிட நாங்கள் சிறப்பாக செய்ய முடியும்” என்று மடானி எரிபொருள் மானியத் திட்டம் குறித்து ஸாஹிட் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








