கூச்சிங், ஸ்ரீ அமானில் உள்ள தாமான் செந்தோசா இண்டாவில், இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.
சம்பவ நடந்த போது, அவ்வீட்டில் 6 பேர் இருந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3.02 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தை அடைந்த வீரர்கள், வீட்டின் உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
5 பேரை தீக்காயங்களுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள், முற்றிலும் எரிந்து சாம்பலான வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, 9 வயது சிறுவன் அவ்வீட்டின் முதல் தளத்தில் எரிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்டவர்கள் ஸ்ரீ அமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








