Mar 7, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

Share:

கூச்சிங், ஸ்ரீ அமானில் உள்ள தாமான் செந்தோசா இண்டாவில், இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.

சம்பவ நடந்த போது, அவ்வீட்டில் 6 பேர் இருந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை சுமார் 3.02 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தை அடைந்த வீரர்கள், வீட்டின் உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

5 பேரை தீக்காயங்களுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள், முற்றிலும் எரிந்து சாம்பலான வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, 9 வயது சிறுவன் அவ்வீட்டின் முதல் தளத்தில் எரிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்டவர்கள் ஸ்ரீ அமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்