ஜார்ஜ்டவுன், மார்ச்.02-
பினாங்கு தீவில் வாகன நிறுத்தக் கட்டணத்தைச் சேகரிக்க நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், பினாங்கு மாநகர மன்றத்துக்கு சுமார் 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Perkhidmatan Alam Indah Sdn Bhd என்ற அந்த நிறுவனம், மாநகர மன்றத்துக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திரக் கட்டண நிலுவைத் தொகையான 5.702 மில்லியன் ரிங்கிட் மற்றும் ஸ்மார்ட் பார்க்கிங் கருவிகள் தொடர்பான 64 ஆயிரம் ரிங்கிட் ஆகியவற்றை வழங்க வேண்டும் என நீதிபதி Kenneth St James தீர்ப்பளித்தார்.
இருப்பினும், வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற அறிவிப்புகளுக்காகக் கோரப்பட்ட 36 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.








