ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 134 கிராமங்களில் கண்டறியப்பட்ட 10,301 குடிசைவாசிகளின் பிரச்சினையைத் தீர்க்க ஊராட்சி மேம்பாட்டு அமைச்சும் மாநில அரசும் இணைந்து செயல்பட உள்ளது
இது குறித்து பேசிய அவ்வமைச்சின் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நசிர் தெரிவிக்கயில், மக்கள் வீட்டுத் திட்டம் என்றழைக்கப்படும் பிபிஆர் வீடுகள். மக்கள் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது பி 40 மக்களிம் பயன்பாட்டிற்காக கட்டப்படுவதாகும். இந்த PPR திட்டத்தால், மாநில அரசு நிலையில் உள்ள குடிசைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றார் அக்மால் நஸ்ருல்லா .
எனவே, புதிதாக கட்டப்பட்ட பிபிஆர் வீடுக்ளில் குடிசைவாசிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.








