Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிறைச் சாலையில் தடுப்புக்கைதி மரணம்
தற்போதைய செய்திகள்

சிறைச் சாலையில் தடுப்புக்கைதி மரணம்

Share:

பெர்லிஸ் தடுப்பு முகாமில் கைதி ஒருவர் ​மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 42 வயதுடைய அந்த கைதி நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் மதிய உணவுக்கு பிறகு ​மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அந்த கைதி, லங்காவி தடுப்பு முகாமிலிருந்து பெர்லிஸ் தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டப் பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

25 நிமிடத்திற்கு பிறகு அந்த கைதி கங்கார், துவான்கு ஃபௌஸியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News