Aug 9, 2026
Thisaigal NewsYouTube
வக்கிரச் செயலில் ஈடுபட்ட அந்த மருத்துவர் கைது
தற்போதைய செய்திகள்

வக்கிரச் செயலில் ஈடுபட்ட அந்த மருத்துவர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.07-

பினாங்கு, ஜாரஜ்டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாது ஒருவரை ஆடை களையச் செய்து, வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 4 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரின் அடிப்படையில் இவ்விவகாரத்தை புலன் விசாரணை செய்து வந்த போலீசார், 43 வயதுடைய அந்த மருத்துவரை நேற்று கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவர் இன்று காலையில் மாஜிஸ்திரேட் நட்ராதுன் முகமட் சைடி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் மார்ச் 10 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

கைகால் நகங்களைச் சீர்படுத்தும் ஒப்பனைப் பணியாளரான அந்த மாதுவை, பரிசோதனை என்ற பெயரில், உதவிக்கு பெண் தாதியர் யாரையும் அனுமதிக்காமல் தனது அறையில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து