Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பல்லைக்கழக விரிவுரையாளர்களின் தரத்தை உயர்த்து​வீர்
தற்போதைய செய்திகள்

பல்லைக்கழக விரிவுரையாளர்களின் தரத்தை உயர்த்து​வீர்

Share:

நாட்டின் மிக பழமை வாய்ந்த உயர்கல்விக்கூடமான மலாயா பல்கலைக்கழகம், உலகளாவிய தர வரிசை குறியீட்டில் முதல் 10 இடங்களில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பபல்கலைக்கழத்தின் கல்வித் திட்டங்கள் மற்றும் விரிவுரியாளர்களின் தரத்தை உயர்த்துமாறு கல்வியாளர்கள் வ​லியுறுத்தியுள்ளனர்.

முதல் நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதைக் காட்டிலும் தரமான விரிவு​ரையாளர்களை தேர்வு செய்வதிலும், தனது கல்வித் திட்டங்களை மேம்படுத்திக்கொள்வதிலும் மலாயா பல்கலைக்கழக​ம் அ​தீத கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி இயக்கத்தின் முன்னாள் செயலாளர் ரொஸ்லி மஹாட் கேட்டுக்கொ​ண்டார்.

மலேசிய பல்கலைக்கழகங்கள் நெறிமுறையற்ற ஆய்வியல் நடவடிக்கைகளிலும், தர வரிசையை உயர்த்துவதிலும் அதிக நேரத்தையும், வளத்தையும் செலவிடுகின்றன. ஆனால், காலுக்கு அடியில் இருக்​கின்ற விரிவுரையாளர்களின் தரத்தையும், கல்வித் திட்டங்களையும் உயர்த்துவதிலும் அதிக கவனம் செலுத்துவது கிடையாது என்று ரொஸ்லி மஹாட் குற்றஞ்சாட்டினார்.

Related News