நிலுவையில் உள்ள தங்களின் வருமானவரியைச் செலுத்த தவறியுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரியாக மொத்தம் 730 கோடி வெள்ளி செலுத்தப்படாமல், இவர்கள் பாக்கி வைத்துள்ளதாக அந்த வாரியத்தின் பேச்சாளர்ச்ரஞ்ஜிட் கவுர் தெரிவித்தார்.
100 வெள்ளிக்கும் குறைவாக வருமான வரி பாக்கி இருந்தாலும் அவர்களும் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்படுவர். சம்பந்தப்பட்டவர்கள் விமான நிலையத்திலேயே குடிநுழைவுத் துறையினாரால் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவர் என்று ரஞ்சிட் கவுர் விளக்கினார்.
வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு மலேசியரும் பயணத்திற்கு முன்னதாக வருமான வரி தொடர்பான தங்களின் தார்மீக கடப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும். அதன் பின்னரே அவர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் அந்த உயர் அதிகாரி தெளிவுபடுத்தினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


