இணையம் வாயிலாக அந்நிய நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் மோசடி புரிந்த சந்தேகத்தின் பேரில் 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் உளவு/ நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 17 முதல் 37 வயது வரையிலான 43 ஆண்களும் 34 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் 35 கணிணிகள், 29 மடிக்கணினிகள், ஒரு கையடக்க கணினி மற்றும் 38 தொழிலாளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


