Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்நிய நாணய மாற்று மோசடி தொடர்பில் 77 பேர் கைது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாணய மாற்று மோசடி தொடர்பில் 77 பேர் கைது

Share:

இணையம் வாயிலாக அந்நிய நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் மோசடி புரிந்த சந்தேகத்தின் பேரில் 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் உளவு/ நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 17 முதல் 37 வயது வரையிலான 43 ஆண்களும் 34 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் 35 கணிணிகள், 29 மடிக்கணினிகள், ஒரு கையடக்க கணினி மற்றும் 38 தொழிலாளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

Related News