Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் 5 மில்லியன் ரிங்கிட் தீர்ப்பு நிபந்னையுடன் ஒத்தி வைப்பு

Share:

ஷா ஆலாம், பிப்.12-

அல்தான்துயா மரண வழக்கில் அரசாங்கமும் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டாவும் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் 5 மில்லியன் ரிங்கிட் தீர்ப்பை நிபந்தனையுடன் ஒத்திவைத்துள்ளனர். அல்தான்துயா குடும்பத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒத்திவைப்பு அனுமதிக்கப்பட்டது.

இந்த முடிவை நீதித்துறை ஆணையர் சுமதி முருகையா தெரிவித்ததாக அல்தான்துயா குடும்பத்தாரின் வழக்கறிஞர் சங்கீட் கோர் டியோ குறிப்பிட்டார்.

இந்த பணம் குடும்பத்தின் வழக்கறிஞர் கணக்கில் வைக்கப்படும். மேல்முறையீடு மே 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2022 இல், உயர் நீதிமன்றம் அரசாங்கம், ரசாக், இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளான சிருல் அசார் உமார், அசிலா ஹட்ரி ஆகியோர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அல்தான்துயா கடந்த 2006 இல் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது உடல் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது. இதன் தொடர்பில் அசிலாவுக்கும் சிருலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அசிலாவின் தண்டனை பின்னர் குறைக்கப்பட்டது. கடந்த 2023இல் விடுதலையான பிறகு, சிருல் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

Related News