May 16, 2026
Thisaigal NewsYouTube
568,200 ரிங்கிட் பண மோசடி: முன்னாள் பேரங்காடி ஊழியர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்!
தற்போதைய செய்திகள்

568,200 ரிங்கிட் பண மோசடி: முன்னாள் பேரங்காடி ஊழியர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

பேரங்காடி ஒன்றின் முன்னாள் காசாளர் ஒருவர் தனக்கு எதிரான நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளை மறுத்து அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல் விசாரணை கோரியுள்ளார்.

28 வயதான நூர் அதிகா அஷிரா முகமட் ஃபௌஸி, அவர் பணியாற்றிய பேரங்காடிக்குச் சொந்தமான Touch ‘n Go eWallet சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, தனது கணக்கிற்கும், தனது உறவினர்களில் கணக்கிற்கும் சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலாக அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2024 ஜுலை 9-ஆம் தேதி வரையில், ஏயோன் டேசா பார்க்சிட்டியில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தார் என நம்பப்படுகின்றது.

அதே வேளையில், கடந்த 2023 ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரையில் பேரங்காடியின் Touch ‘n Go-வைப் பயன்படுத்தி தனது சொந்தக் கணக்கிற்கு 98,000 ரிங்கிட் வரையில், பணப் பரிமாற்றம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து