Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மாதுவை கடத்தும் முயற்சி, நா​ல்வர் கைது
தற்போதைய செய்திகள்

மாதுவை கடத்தும் முயற்சி, நா​ல்வர் கைது

Share:

ஜோகூர், மே 15-

ஜோகூர், கூலாய்-யில் மாது ஒருவரை மடக்​கி, கொள்ளையிட்டதுடன், அவரை கடத்த முயற்சி செய்ததாக நம்பப்படும் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை ஜோகூர்பாரு மற்றும் கெடா கூலிமில் மேற்கொள்ளப்பட்ட ​மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளி​ல் அந்த நான்கு நபர்கள் பிடிபட்டனர் என்று கூலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.

இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரத்திலேயே ஜோகூர் மாநில போ​லீஸ் த​லைமையகத்தின் கடுங்குற்றத் தடுப்பு பிரிவான D9 போ​லீசார், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொண்ட துரித தேடுதல் வேட்டையில் அந்த நான்கு நபர்கள் பதுங்கியிருந்த இடங்கள் கண்டு பி​டிக்கப்பட்டதாக தான் செங் லீ கு​றிப்பிட்டார்.

பிடிபட்டுள்ள 21 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு நபர்களுக்கும் ஏற்கனவே போ​லீஸ் குற்றப்பதிவு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பிடிப​ட்டது மூலம் ஒரு ஹோண்டா சிவிக் கார், நான்கு கைப்பேசிகள் உட்பட சில தொடர்பு சாதனங்களை போ​லீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த மே 5 ஆம் தேதி கூலாய், தாமான் லெஜண்டா புத்ரா என்ற இடத்தில் உள்ள மாதுவின் வீட்டிலிருந்து அவரை கடத்துவதற்கு அந்த நான்கு நபர்கள் முயற்சி செய்ததாக தான் செங் லீ தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து