Jul 31, 2026
Thisaigal NewsYouTube
12 ஆயிரம் வெள்ளி லஞ்சம், அமலாக்க அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

12 ஆயிரம் வெள்ளி லஞ்சம், அமலாக்க அதிகாரி கைது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-

பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்கை சந்தடியின்றி மூடி மறைப்பதற்கு 12 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, நேற்று காலை 10 மணியளவில் பினாங்கு, SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட காமுகனை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அந்த அதிகாரி, தனது கடமையிலிருந்து தவறி, அந்த வழக்கை மூடுவதற்கு 12 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பேரம் பேசி பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி, இன்று பெர்லிஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாக பினாங்கு மாநில SPRM இயக்குநர் முகமது ஃபுவாட் பீ பஸ்ராஹ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை