Jul 4, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட்டைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட்டைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை.31-

வரும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 100 ரிங்கிட் உதவித் தொகையைப் பெறுவதற்கு மக்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.

இந்த 100 ரிங்கிட் உதவித் தொகை, ஒவ்வொருவரின் மைகாட் அட்டையிலும் பட்டுவாடா செய்யப்படும். இந்தத் தொகையைப் பெறுவதற்கு சாரா திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை அல்லது எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட 22 மில்லியன் பேருக்குச் சென்றடையவிருக்கும் இந்த 100 ரிங்கிட்டை மைகாட் அட்டையில் சேர்ப்பதற்கான பிரத்தியேகமான தரவு உள்ளீட்டை, அந்த அடையாள அட்டையில் தேசிய பதிவு இலாகா ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

100 ரிங்கிட்டைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை | Thisaigal News