Jul 2, 2026
Thisaigal NewsYouTube
குவா மூசாங் பகுதியில் 55 வயது ஆடவர் யானைகள் தாக்கி இறந்ததாக சந்தேகம்
தற்போதைய செய்திகள்

குவா மூசாங் பகுதியில் 55 வயது ஆடவர் யானைகள் தாக்கி இறந்ததாக சந்தேகம்

Share:

கிளந்தான் மாநிலம் குவா மூசாங் பகுதியில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதில், 55 வயது ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜாலான் லாடாங் செராசா அருகிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் ஆற்றங்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட பாலோ 2 போலீசார், யானைகளின் காலடிச்சுவடுகள் மற்றும் சாணம் இருந்ததைக் கண்டுபிடித்ததாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் பூ தெரிவித்துள்ளார்.

இதனால் காட்டு யானைகள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

குவா மூசாங் பகுதியில் 55 வயது ஆடவர் யானைகள் தாக்கி இறந்தத... | Thisaigal News