நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றும் திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஐந்து முதன்மை விவகாரங்களை அடிப்டையாக கொண்டு இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் மற்றும் கிராம வீடுகளின் சுக்கய் பிந்து எனப்படும் வீட்டு வரி விலக்களிக்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை பராமரிப்பதில் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் வெள்ளி, 5 ஆயிரம் வெள்ளியாக வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


