கோலாலம்பூர்,ஜன.17
செராஸ், ஜாலான் பெசார் சாலாக் செலாத்தான்னில் கிரேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மீது மோதியதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12:06 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட காவல்துறையின் துணைத்தலைவர் ரிட்சுவான் காலிட் கூறினார்.
இரவு 10:40 மணியளவில் சம்பந்தப்பட்ட கிரேன் அப்பகுதியில் அலங்கார விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.
அவ்விபத்தின் போது சாலையோரத்தில் இருந்த கார் மீது கிரேன் மோதியதில் அக்காரின் சில பாகங்கள் சேதமடைந்ததாகவும் உயிர்சேதம் எதுவும் நடக்கவில்லை என்றும் ஓர் அறிக்கையில் ரிட்சுவான் காலிட் விவரித்தார்.








