May 27, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதப்பட்டு தந்தையும், மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மோதப்பட்டு தந்தையும், மகனும் மரணம்

Share:

கூலிம், டிச. 27-


ஓர் இந்திய நபரும், அவரின் மகனும் சென்ற மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி, விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகனும் மாண்டனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.07 மணியளவில் கெடா, கூலிம், ஜாலான் கெனாரி, தாமான் கெனாரி சாலையில் நிகழ்ந்தது.

36 வயது வினோத் அரசு மற்றும் அவரின் 8 வயது மகன் நவினேஸ் வினோத் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாக நம்ப்படும் வோல்ஸ்வேகன் கார் ஒன்று, தனது வழித்தடத்திலிருந்து விலகி எதிர்திசையில் நுழைந்ததில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கூலிம் தமிழ்ப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவரான நவினேஸ், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரின் தந்தை வினோத், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி, கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி அஸிஸான் தெரிவித்தார்.

தந்தையையும், மகனையும் மோதித்தள்ளிய வோல்ஸ்வேகன் காரை செலுத்தியவர் 32 வயது பெண் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. அவர் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை.

உயிரிழந்த வினோத், கூலிமில் தொழிற்சாலை ஒன்றில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு