May 28, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

கிள்ளான் பள்ளத்தாக்கில் தனது முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஆஜராகினார்.

தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி,இரண்டு முறை எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகத் தவறிய இஸ்மாயில் சப்ரி, நேற்று மார்ச் 12 ஆம் தேதியுடன் மருத்துவ விடுப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார்.

காலை 9.46 மணியளவில் இஸ்மாயில் சப்ரியின் கார், புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் நுழைந்தது.

பிரதான நுழைவாயிலில், தனது கார் கண்ணாடியை இறக்கி, அவ்விடத்தில் குழுமியிருந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை நோக்கி, இஸ்மாயில் சப்ரி கையசைத்தார்.

இஸ்மாயில் சப்ரியிடம், கடந்த மார்ச் 7 ஆம் தேதி, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியிருந்தது. எனினும் அவரின் உடல் நிலை காரணமாக விசாரணையை எஸ்பிஆர்எம் ஒத்திவைத்தது.

மொத்தம் 177 மில்லியன் ரிங்கிட், பணமாகவும், பொருளாகவும் கைப்பற்றப்பட்ட இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட இந்த விசாரணையில் அவர் ஒரு சாட்சி அல்ல. மாறாக, சந்தேக நபராக எஸ்பிஆர்எம் வகைப்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 93 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்